நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது மஸ்கெலியா மவுசாகலை நீர் தேக்கத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கங்கேவத்தை பகுதியிலுள்ள நீர் தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
35 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், உடலில் சில காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் தனிப்பட்ட அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.