Monday, May 13, 2024
Homeஇலங்கை செய்திகள்பருத்திதுறையில் 2 வருடங்களாக இரு தமிழ் பொலிசாரால் சிறுமி வல்லுறவு!

பருத்திதுறையில் 2 வருடங்களாக இரு தமிழ் பொலிசாரால் சிறுமி வல்லுறவு!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை 2 ஆண்டுகளாக இரண்டு தமிழ் பொலிசார் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது, அதை காணொலியாக எடுத்து, அதை வைத்து மிரட்டியே இந்த கொடூரத்தை தொடர்ந்துள்ளனர்.

இரண்டு வருடங்களின் முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை இரண்டு தமிழ் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்களில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளனர்.

அதனை காணொலியாக பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, கடந்த 2 வருடங்களாக தொடர் வல்லுறவிற்குள்ளாக்கி வந்துள்ளனர்.

தற்போது 19 வயதாகியுள்ள அந்த யுவதி, கடந்த வியாழக்கிழமை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் 2 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்குள்ளாகியது தெரிய வந்தது.

சம்பவம் நடைபெற்ற போது சந்தேகநகரான பொலிஸ் உத்தியோகத்தர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும், பின்பு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும், தற்போது முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் கடமையாற்றுவது தெரிய வந்தது.

அந்த சந்தேகநபர், சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது எடுத்த வீடியோவை பாடசாலை மாணவர்களிற்கும் வழங்கியுள்ளார்.

தம்மிடமும் வீடியோ இருப்பதாக தெரிவித்து, மாணவர்கள் சிலரும் அந்த சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கி முயன்றதும் தெரிய வந்துள்ளது.

பருத்தித்துறை பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments