Thursday, May 2, 2024
Homeஉலக செய்திகள்பிரான்சில் கொடூரம் - வகுப்பறையில் மாணவனின் கத்தி குத்தில் ஆசிரியை துடிதுடித்து பலி.

பிரான்சில் கொடூரம் – வகுப்பறையில் மாணவனின் கத்தி குத்தில் ஆசிரியை துடிதுடித்து பலி.

பிரான்சில் பாடசாலை மாணவர் ஒருவரால் ஆசிரியை ஒருவர் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

50 வயதான ஸ்பெயின் ஆசிரியை ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 வயதுடைய மாணவன் தனது பையில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு ஆசிரியை கற்பிக்கும் வகுப்பறைக்கு வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்கப்பட்ட ஆசிரியை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். குறித்த மாணவன் வகுப்பறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டு ஆசிரியையின் மார்பில் கத்தியால் குத்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
அவர் ஏதோ மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரான்ஸ் கல்வி அமைச்சரும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments