மொனராகலை, மெதகம திம்புல்தேன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், கொலையை செய்த நபர் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு மொனராகலை சிரிகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.