Monday, April 29, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்மஞ்சள் நீராட்டுவிழா நடத்த வெளிநாட்டில் இருத்து தாயகம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

மஞ்சள் நீராட்டுவிழா நடத்த வெளிநாட்டில் இருத்து தாயகம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணும் வயோதிபரும் உந்துருளி சிலாவத்தி பிரதேசத்தில் இருந்து கொக்கொளாய் செல்லும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டு பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் காயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஜேர்மனியில் வசிக்கும் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த சரீதா ஜெனிதா என்ற 42 வயதுடைய குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து தனது சொந்த இடமான முல்லைத்தீவு – சிலாவத்தைக்கு வந்திருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments