Sunday, April 28, 2024
Homeஇலங்கை செய்திகள்மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பலியான இளைஞன் ! கதறும் குடும்பத்தினர் !

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பலியான இளைஞன் ! கதறும் குடும்பத்தினர் !

மட்டக்களப்பு, காத்தான்குடி- கிரான்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த ஏறாவூர் டிப்போவிற்குச் சொந்தமான பஸ் வண்டி, கல்முனையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் ஏறாவூர் டிப்போவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தது.

இதன்போது கிரான்குளம் விஸ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 23 வயது இளைஞனை மோதிவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய கோக்குவரத்து பொலிஸார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளியும் மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments