Tuesday, April 30, 2024
Homeஇந்திய செய்திகள்மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை -எந்தெந்த ஏரியா என்பதை இங்கே காண்போம் !

மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை -எந்தெந்த ஏரியா என்பதை இங்கே காண்போம் !

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (24-01-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அதன்படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்:

கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலைமுடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி,

வெ.புதூர், காடம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments