மலேசியாவின் 10வது பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று (24.11.2022) நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவின் விருப்பப்படி அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய நேரப்படி இன்று (24.11.2022) மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரண்மனையின் இந்த அறிவிப்பால் மலேசியாவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.