பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை- மயிலகஸ்தன்னை பகுதியை சேர்ந்தவரும் பதுளை பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றுபவருமான 44 வயதுடைய மருத்துவரே கைது செய்யப்பட்டவராவார்.
அவரது காரை சோதனையிட்டபோது அதிலிருந்து 145 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரும் போதை மாத்திரைகளும் பதுளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.