மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கியதில் மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவன்வெல்ல மாபிடிகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் களனி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியுள்ளது.
காயமடைந்தவர்கள் அவிசாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.