Saturday, May 4, 2024
Homeஇலங்கை செய்திகள்மின்வெட்டு காலம் திடீரென அதிகரிப்பு!

மின்வெட்டு காலம் திடீரென அதிகரிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சை காரணமாக 2 நாட்களாக மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று முதல் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன் நடைமுறையில் இருந்த 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு, தற்போது மேலும் 10 நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மின்வெட்டு குறித்து ஆலோசிக்க நேற்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments