ரயில் பயணத்தின் பொது பயண டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர் ஒருவர் அறுந்து விழுந்த மின்கம்பி தாக்கியதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த வீடியோ கரக்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்துள்ளது. தலைக்கு மேல் மரணம் என்பதற்கு ஏற்றவாறு இந்த வீடியோ உள்ளது.இருவர் நின்றுகொண்டிருக்க ஒருவர் மீது மின் கம்பி விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் விழுந்த சமயம் நல்லவேளையாக எந்த ஒரு ரயிலும் வரவில்லை. இல்லெயென்றால் இது ஒரு கோர சம்பவமாக முடிந்திருக்கும்.உலகில் நாம் வாழும் காலத்தில் எப்போது எதுவேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும்நடக்கலாம். அதற்கு உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் சோதனை செய்யும் பணியில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவர் தனது சகாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.அப்போது திடீரென்று மேலே இருந்து மின்சார கம்பி அறுந்து அவர் மீது விழுகிறது. இதில் மின் தாக்கியதில் அங்கிருந்து அவர் தூக்கிவீசப்பட்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தார் இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக செயல்பட்டு அவரை மீது அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மின் தாக்கியதில் படுகாயமடைந்த அந்த ஊழியர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதில் இருவர் நின்றுகொண்டிருக்க ஒருவர் மீது மின் கம்பி விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விழுந்த சமயம் நல்லவேளையாக எந்த ஒரு ரயிலும் வரவில்லை. இல்லெயென்றால் இது ஒரு கோர சம்பவமாக முடிந்திருக்கும்.