நாட்டிலுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நாளை (01-11-2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை உணவுக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்காக நெத்தல் கருவாட்டுக்கு ரூ.150ம், சிவப்பு பச்சை அரிசி ரூ.6ம், கெரி சம்பா ரூ.15ம், பெரிய வெங்காயம் ரூ.30ம் குறைக்கப்படும்.
நெத்தல் கருவாடு ஒரு கிலோகிராம் 1150 ரூபாவாகவும், சிவப்பு பச்சை அரிசி 199 ரூபாவாகவும், கெரி சம்பா 225 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் 225 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.