இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது மகளைத் தேடும் வேளையில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி கந்தையா இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது மகள் திருவா கந்தையாவை தேடிய இந்த தந்தை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.
உறவினர்களை தேடி அலையும் பலர் வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.