Saturday, May 4, 2024
Homeவிளையாட்டுமெஸ்ஸி - ரொனால்டோ மோதும் போட்டி.

மெஸ்ஸி – ரொனால்டோ மோதும் போட்டி.

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் நேரடியாக மோதிக் கொள்ளும் போட்டி சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இன்று நடைபெறுகின்றது.

சௌதி ஆல்-ஸ்டார் லெவன் அணிக்கு எதிரான பிரெஞ்சு சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் இடையிலான நட்பு ஆட்டத்தில் இவர்கள் இருவரும் மோதுகின்றார்கள்.

ஆனால் வளைகுடா நாடுகளின் விளையாட்டில் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு இந்த நட்பு விளையாட்டு மற்றொரு உதாரணம். மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பே, நெய்மார் ஆகியோர் ஆடும் பிஎஸ்ஜி அணி கத்தார் அரச குடும்பத்துடன் தொடர்புடைய முதலீட்டாளர்களால் 2011-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது.

ரொனால்டோ சவுதி ஆல்-ஸ்டார் லெவன் அணியில் பங்கேற்று, மெஸ்ஸி உள்ளிட்டோரை எதிர்கொள்கிறார். சௌதி கிளப்பான அல்-நாசருடன் இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் அவர் ஏற்கெனவே கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 1770 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்த நட்புப் போட்டி எந்த அளவுக்கு முக்கியம் என்றால், ஒரு ரசிகர் கண்காட்சி போட்டிக்கான டிக்கெட்டை சுமார் 20 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்.

இது ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கி உலக கால்பந்தில் செல்வாக்கு அதிகரித்து வரும் செலவின சக்தியை எடுத்துக்காட்டுகிறது.

முன்னர் சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் போன்ற வெளிநாடுகளில் உள்ள பாரம்பரிய சொத்துக்களுக்காக அறியப்பட்டவை, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் போன்ற பிராந்திய அதிகார மையங்கள். இப்போது அதிகளவில் விளையாட்டுத் துறையில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளன. வல்லுநர்கள் இதை ராஜதந்திர முயற்சியாகக் கருதுகின்றனர்.

2008 ஆம் ஆண்டிலேயே மான்செஸ்டர் சிட்டி கிளப்பில் முதலீடு செய்யப்பட்டது. இந்த இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியை எமிரேட்ஸில் அங்கம் வகிக்கும் நாட்டின் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் வாங்கினார். கடந்த சில ஆண்டுகளில், இத்தகைய பட்டியல் மிகவும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுடன் அதிகரித்துள்ளது.

மற்றொரு கிளப்பான நியூகேஸில் யுனைடெட், சவுதி அரேபிய பொது முதலீட்டு நிதியத்தால் கையகப்படுத்தப்பட்டது.

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் கவனம் செலுத்திய பிரிட்டனில் இது குறித்து சர்ச்சை எழுந்தது. சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விமர்சகரான கஷோக்கி அக்டோபர் 2018 இல் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்திற்குச் சென்றபோது கொல்லப்பட்டார்.

மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் சௌதி பட்டத்து இளவரசர் கொலைக்கு உத்தரவிட்டதாக நம்புகின்றன – இந்த குற்றச்சாட்டை அவர் கடுமையாக மறுத்துள்ளார். சௌதி அரசு கிளப்பைக் கட்டுப்படுத்தாது என்ற “சட்ட ரீதியான உத்தரவாதங்கள்” இருக்கும்போது மட்டுமே இப்படி அணிகளை வாங்குவது அனுமதிக்கப்பட்டது.

வளைகுடா நாடுகளின் அணிகளில் பங்குகளை வாங்குவதுடன், முக்கிய போட்டிகளை நடத்துவது மற்றும் பெரிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் கையெழுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.

இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பைகள் போன்ற ஐரோப்பிய கால்பந்து போட்டிகளின் சிறப்பு பதிப்புகளை நடத்துவதில் சவுதி அரேபியா முதலீடு செய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ், ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலனுடன் பல மில்லியன் டாலர் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கிறது.

2022 ஃபிஃபா ஆண்கள் உலகக் கோப்பையை கத்தார் நடத்துவது, வளைகுடா நாடுகளில் பெரிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான நகர்வுகளுக்கு உச்ச உதாரணம். ஆனால் அது மட்டும் அல்ல. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அனைத்தும் 2023 சீசனில் F1 கிராண்ட் ப்ரீ போட்டிகளை நடத்துகின்றன.

நீச்சல், தடகளம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பல்வேறு வகையான விளையாட்டுகளின் உலக சாம்பியன்ஷிப்பை கத்தார் நடத்தியது. சௌதி அரேபியாவும் பல உயர்மட்ட குத்துச்சண்டை போட்டிகள் மற்றும் WWE மல்யுத்த நிகழ்வுகளை நடத்தியது. மல்யுத்த விளையாட்டு பொழுதுபோக்கு பிராண்ட் சௌதி உரிமையாளருக்கு விற்கப்படலாம் என்ற வதந்திகள் (முரண்பாடுகள் உண்டு) கூட உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments