Thursday, May 2, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துகொண்ட ஆசிரியர் ! வெளியான காரணம் !

யாழில் தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துகொண்ட ஆசிரியர் ! வெளியான காரணம் !

யாழ் கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் 65 வயதான கார்த்திகேசு திருப்பதி எனும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீயை மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். திருப்பதி மாஸ்டர் என இவர் கோப்பாயில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவர்.

தனிமையில் வசித்து வந்த இவர், இன்று காலை 6 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கு இடையே உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.

வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது.

இதேவேளை, உயிரிழந்தவரின் மனைவி சிறிது காலத்துக்கு முன்னர் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

மனைவி உயிரிழந்த சோகத்திலேயே இவர் தனக்குத்தானே தீயை முட்டி உயிரிந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments