Friday, May 3, 2024
Homeஇலங்கை செய்திகள்யாழில் பலரை வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா!!

யாழில் பலரை வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா!!

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்காக, வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள், சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்விற்கு தென்பகுதியில் இருந்து யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments