வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவடிதான் கடலில் மீனவர் ஒருவரின் சடலம் மிதந்துள்ளது.
குறித்த மீனவர் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அதன்பிறகு சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.