யாழ். வல்வை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சித்திரை பௌர்ணமி தினமான இன்றைய தினம் காலை நடைபெற்றுள்ளது.
தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக ஊறணி தீர்த்தக்கடற்கரையில் இராட்சத புகைக்குண்டு பறக்கவிடும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது
இதன்போது பறக்கவிடப்பட்ட ராட்சச குண்டு வீட்டின் மீது விழுந்து தீப்பரவியதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.