யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் வீதிகளை புனரமைக்கக் கோரி மூளாய் அரசடி சந்தியில் இன்று காலை வனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள யாழ்ப்பாணம் – மணிபாய் – காரைநகர் வீதி, மாவடி – மூலை வீதி, வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியை புனரமைக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மழைக்காலங்களில் இவ்வீதிகளின் போக்குவரத்து முற்றாக தடைபடுவதாகவும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை எனவும் பிரதேவ பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மக்களின் போராட்டத்தின் முடிவில் வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்ட செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மேல்மாகாண செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன் அதன் பிரதி ஒன்று வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த வீதியை புனரமைக்குமாறு வலியுறுத்தி இன்று காலை சங்கானை பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.