Sunday, April 28, 2024
Homeஇலங்கை செய்திகள்யாழ் நல்லூர் கந்தன் மகோற்சப பெருவிழாவையொட்டி மாநகரசபையினருக்கு காளாஞ்சி கையளிப்பு !

யாழ் நல்லூர் கந்தன் மகோற்சப பெருவிழாவையொட்டி மாநகரசபையினருக்கு காளாஞ்சி கையளிப்பு !

யாழ் நல்லூர் கந்தன் மகோற்சப பெருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் யாழ் மாநகரசபையினருக்கு காளாஞ்சி கையளிக்கப்பட்டுள்ளது

வரலாற்று சிறப்பு பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாவுள்ளது

தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் மகோற்சப பெருவிழா நடைபெறவுள்ளது.

இந் நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ் மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (20) பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

வைபவத்தின்போது பாரம்பரிய முறைப்படி யாழ்.மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் சிறப்பாக அமையப்பெற்றிருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments