Monday, May 6, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ்.மாநகர சபையின் திருவிளையாடல்!! மாநகரசபை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்!

யாழ்.மாநகர சபையின் திருவிளையாடல்!! மாநகரசபை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக நபர் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும். இதனை மாநகரசபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

தனக்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் வரும் காலத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபருடன் யாழ்மாநகரசபை ஊழியர்கள் கலந்தாலோசித்தபோதும் குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதே வேளை யாழ் மாநகரசபை எல்லையின் கீழ் வசிக்கும் ஒவ்வொரு குடியிருப்பாளர்களும் ஏதோ ஒரு வகையில் குறித்த சபையில் உள்ள நிர்வாகத்திறன் அற்ற சில அதிகாரிகள், மற்றும் அதிகாரத் தோரணையில் உள்ள பட்டியலிடப்படாத ஊழியர்களால் பாதிப்புக்குள்ளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments