மாவட்டம் கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் வினித்(22), அதே பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா பட்டேல் (20). இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணத்தில் பெண் வீட்டாருக்கு விருப்பம் இல்லாத நிலையில் கிருத்திகா பட்டேலை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் சிசிடிவி வீடியோ தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கிருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், உறவினர்கள் என 7 பேர் மீது வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கிருத்திகாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கிருத்திகா தனக்கு வேறு திருமணம் ஆகி விட்டதாகவும் தான் பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறும் வீடியோ இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன் விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை என கிருத்திகா கூறினார்.