ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கும் அவர், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு குறித்து ஆராயப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.