Tuesday, May 14, 2024
Homeஇலங்கை செய்திகள்வவுனியாவில் தனது சிறிய தந்தை மற்றும் சகோதரனால் நீண்ட காலமாக துஸ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி !...

வவுனியாவில் தனது சிறிய தந்தை மற்றும் சகோதரனால் நீண்ட காலமாக துஸ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி ! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் பொலிஸார் இன்று (08) தெரிவித்தனர்.

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 10 வயது மாணவி கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதனையடுத்து கடந்த 30ஆம் திகதி வவுனியா பொலிஸார் மாணவியின் சகோதரர் மற்றும் தந்தை உட்பட 16, 32 மற்றும் 53 வயதுடைய மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதற்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என சமூக அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments