Friday, May 3, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறப்பு!

வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறப்பு!

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிட தொகுதி நேற்று 27.10.2022 வியாழக்கிழமை திறந்து வைக்கபட்டது.பாடசாலையின் அதிபர் திரு.செ.ஜெயபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் அவர்களால் புதிய வகுப்பறை கட்டிடதொகுதி வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் வகுப்பறை செயற்பாடுகளுக்காக கையளிக்கபட்டது.

2021 ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில்(PSDG) அமைக்கப்பட்ட (100×25 ) வகுப்பறை கட்டிடத் தொகுதியே திறந்து இவ்வாறு வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் திரு.இ.பிரதாபன்(பிரதேச செயலாளர் வவுனியா வடக்கு) திரு. து.ரவிச்சந்திரன்(ஆசிரிய ஆலோசகர்- வவுனியா வடக்கு வலயகல்வி அலுவலகம்) திரு.ஞா.அகிலன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதி பிரதம செயலாளர் அலுவலகம் திட்டமிடல்) பாடசாலையின் முன்னைநாள் ஒய்வு பெற்ற அதிபர் திரு.க.சிவராசா மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள்,பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments