வவுனியா – நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்க்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (04.11.2022) வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வீதியோரம் சென்ற நபர் ஒருவர் வீதியோரம் கைக்குண்டு ஒன்று இருப்பதனை அவதானத்து பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுங்கேணி பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்தனர்.
குறித்த கைக்குண்டு யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஜே.ஆர் ரக கைக்குண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.