வேலன்சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ். பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று (19.01.2023) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்து பல்கலைகழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.