Sunday, April 28, 2024
Homeஇலங்கை செய்திகள்1ம் திகதி இலங்கையை நெருக்கும் புதிய காற்றழுத்தம் - வெளியாகிய எச்சரிக்கை.

1ம் திகதி இலங்கையை நெருக்கும் புதிய காற்றழுத்தம் – வெளியாகிய எச்சரிக்கை.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

அதன்பின்னர், அது படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையை அடையக்கூடும்.

இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ ஆக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments