4வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவ லுனாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.