லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்ரிகிரி பிசோபுரா பிரதான வீதியின் நான்கு வழிச் சந்திப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மித்ரிகிரிய தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் பிசோபந்தரகம சஞ்சனா சத்சராணி ஜயரத்ன என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
நவநகர் பகுதியில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக மாணவி மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் கொஹொம்படமன பிரதேசத்திலிருந்து நவநகரை நோக்கி பயணித்த போது மெதிரிகிரிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் முச்சக்கரவண்டி குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் பொலனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வெலிசர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அதே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.