ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35-40 ரூபாவால் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்றைய தினம் (24) ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ, 125 ரூபாய்க்கு, மில்லர்கள் கொள்முதல் செய்தனர். அறுபத்து நான்கு கிலோ நெல் மூட்டை எண்ணாயிரம் ரூபாய்க்கு மில் உரிமையாளர்கள் வாங்கினார்கள்.
இந்நிலையில், நேற்று (24) ஒரு மூட்டை நெல் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த பருவ அறுவடையின் போது, ஒரு மூடை ரூ.4500க்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ நெல் எழுபது ரூபாய்க்கு வாங்குவதே இவர்களின் இலக்கு என கூறப்படுகிறது.