அடுத்த வருடத்தில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்பட்டு அந்த வருடத்திற்குள் பாடத்திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் பாடத்திட்டத்தை முடிக்க முடிவு செய்திருந்தாலும், உயர்தரப் பரீட்சையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டியிருந்ததால் தவணைகள் தாமதமாகியதாக அவர் கூறினார்.
இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்படும் செஸ் வரியை குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.