கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில், நெதர்லாந்துடன் நடந்த காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4 – 3 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. டிச.,13ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், அர்ஜென்டினா – குரேஷியா அணிகள் மோதுகின்றன.
முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் பிரேசில் அணி, குரேஷியாவுடன், பெனால்டி ஷூட் அவுட்டில், 2 – 4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.