2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்தான் இந்த பட்ஜெட் என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், 9 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் இரட்டிப்பாக மாறியுள்ளது. உலகின் எந்த நாட்டை விடவும் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான முறையில் உள்ளது. உணவு, தானியங்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.