Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்O/L பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

O/L பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லையெனில், உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விண்ணப்பித்தும் இதுவரை அதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் அது தொடர்பில், திணைக்களத்தில் வினவ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 011 522 61 00 அல்லது 011 522 61 26 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இது குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments