நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம், தனது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது ஏன் என்பது குறித்து நமக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன் பிறகு அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தீபக் சந்திரசேகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. அதாவது 2008ஆம் ஆண்டு காயத்ரி விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தார் என்றும் இந்த வழக்கு 2010ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இருவரும் சட்டபூர்வமாக பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக கடவுளிடம் அர்ப்பணித்து விட்டதாகவும் அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்