யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்க்க முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களை தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.
சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக மாணவி ஒருவரிடம் இருந்து 1500 ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.