அசாம் மாநிலம் நாகேனில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் கடந்த 6ம் தேதி நிலடுக்கம் ஏற்பட்ட நிலையில் கட்டிடங்கள் இடிந்து தரமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 28 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே அசாம் மாநிலம் நாகேனில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.