நடிகர் அஜித்தின் மகளாக பல படங்களில் நடித்த நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் படத்தில் நடித்த பிறகு, அனிகா சுரேந்தருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.
தற்போது அவர் பல முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கிறார்.
நடிகை அனிகா சுரேந்தர் சமூக ஊடகங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படத்துடன், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு ஆய்வு செய்து பார்த்ததில் இந்த போஸ்டர் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புகளுக்காக ஒட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைய தேவையில்லை.