Saturday, May 4, 2024
Homeசினிமாஆங்கிலத்தில் பேச நீங்கள் யார்? நடிகர் சித்தார்த்தை கோபப்படுத்திய சிஆர்பிஎஃப் வீரர்

ஆங்கிலத்தில் பேச நீங்கள் யார்? நடிகர் சித்தார்த்தை கோபப்படுத்திய சிஆர்பிஎஃப் வீரர்

சென்னை: ” துணை ராணுவ வீரர்களை ஆங்கிலத்தில் பேசச் சொல்வதற்கு நீங்கள் யார்?” என நடிகர் சித்தார்த்துக்கு சிஆர்பிஎப் வீரர் ஒருவர் கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்து தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாவது வழக்கம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதிமுக மற்றும் பா.ஜ., குறித்து தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவித்து வந்த சித்தார்த், திமுக ஆட்சி வந்ததும் அரசை குற்றம்சாட்டுவது குறைந்துள்ளது.

தனது சமூக வலைதள பக்கத்தில் சித்தார்த் பதிவிட்டதாவது: கூட்டமே இல்லாத மதுரை விமானநிலையம் வந்த வயதான எனது பெற்றோர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது ‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சித்தார்த்தின் குற்றச்சாட்டுகளுக்கு சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பதிலளித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். சிஆர்பிஎப் வீரர் பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அதேநேரத்தில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சிஆர்பிஎப் வீரர் கூறியுள்ளதாவது: எல்லாத்துக்கும் வணக்கம். இந்த பதிவு யாருக்குனா, நடிகர் சித்தார்த் அவர்களே, நீங்க மதுரை விமான நிலையத்துல போயி, துணை ராணுவ வீரர்கள் ஹிந்தியில் பேசச் சொல்லி துன்புறுத்துனதா சொல்றீங்க.

ஆங்கிலத்துல பேசச் சொல்றதுக்கு நீங்க யாரு. இல்லை துணை ராணுவ படைய, இந்திய துணை ராணுவ படைய ஆங்கிலத்துல பேசங்கனு சொல்றதுக்கு நீங்க யாருனு நான் கேட்கிறேன்.

நீ ஏன் ஆங்கிலத்துல பேசச் சொல்ற. நாங்க ஏன் உங்களிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். நாங்க என்ன பிரிட்டிஷ் காரங்களா? இல்லை வெள்ளக்காரங்களா? இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழிய நீ பேசச் சொல்லு. அதை பேசுறோம்.

நீங்க சொல்லு சார், தமிழில் பேச சொல்லுங்கன்னு அப்படின்னா, அங்க யாராவது ஒரு அதிகாரி இருப்பான். கண்டிப்பா தமிழ்காரங்க இருப்பாங்க. தமிழ்காரன கூப்பிட்டு பேச வச்சிருப்பாங்க. இல்லையா, தெலுங்கு தெரியும்னா, தெலுங்கு பேசச்சொல்லு. தெலுங்கு காரங்க இருப்பாங்க. நீ வந்துட்டு என்ன ஆங்கிலத்துல பேசு அப்படின்னா வெள்ளக்காரனா?வெள்ளக்காரன ஹிந்தி தான் கத்துட்டுருக்கான் இங்க வந்து.உடனே…நாங்க துன்புறுத்திட்டோமா?

அப்புறம்,இன்னொரு பதிவு போட்டிருந்த. பெற்றோர் பையில் ஏதோ சில்லரை காசு இருந்துச்சு அது எடுக்க சொன்னாங்கன்னு. சில்லரை காசு இருந்தது எடுக்க சொன்னாங்களே எந்த மொழியில் சொன்னாங்க?.நீ எப்படி புரிஞ்சுக்கிட்ட? சைகையில சொன்னாங்களா? நீ எப்படி புரிஞ்சுக்கிட்டு அத சொல்லு பர்ஸ்ட். அது எப்படி புரிஞ்சுக்கிட்டு நீ பதிவு போட்ட?

அப்புறம் இன்னொனு போட்டிருந்த, வேலையில்லாதவர்கள் ரெம்ப துன்புறுத்துறாங்கன்னு. நீ ரெம்ப வேளையில இருக்கியா? நீ என்னென்ன சில்மிஷம், நீ அட்டகாசம் பண்ணிருக்கன்னு யாருக்கும் தெரியாத திரையுலகத்துல?

டூட்டி பார்க்கிறவங்கள வந்துட்டு கண்ணியமா பேச கத்துக்க எப்பயுமே.அவுங்க டூட்டி பார்க்கிறாங்க அங்க

அவுங்க வேலை அது. அரைமணி நேரம் இல்லை. இரண்டு மணி நேரம் சந்தேகத்துல நிக்க வச்சா நின்னு தான் ஆகணும் நீ. போயி காமி அங்கருந்து ஒரு எட்டு. எட்டு வச்சு காமி ஒரு எட்டு வச்சு காமிக்கிறேன்னு. போக முடியாது உன்னால.

ஏன டூட்டி பார்க்கிற இடத்தில நாங்க பவரு. எதற்கெடுத்தாலும் கூழ கும்பிட்டு போற அரசியல்வாதின்னு நினைச்சியா நீ எங்கள?

எதுக்கெடுத்தாலும் ஓகே சார்… சரிங்க சார்ன்னு சொல்றதுக்கு.

டிபார்ட்மென்ட் பவர்ன என்னனு புரிஞ்சுக்க பர்ஸ்ட். உங்க பெற்றோர் மட்டும் கிடையாது.டிபார்ட்மென்ட்ல சேர்ந்தவுங்க சொந்தக்காரங்க, அவுங்க பெற்றோரே வந்தால் கூட அவுங்களுடைய கடமைய முடிச்சு தான் ஆவாங்க.

அவுங்க வேலையா பார்க்க தான் செய்வாங்க. அதேமாதிரி ஆங்கிலத்துல பேச சொல்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.ஹிந்தி தெரியலைனு சொல்லிட்டு போ. வெட்கப்பட்டு சொல்லு.”எனக்கு ஹிந்தி கத்துக்கலை சார். எனக்கு ஹிந்தி தெரியாது சார். இந்தியாவுல இருக்கிறேன் ஹிந்தி தெரியாதுனு ” சொல்லு.

உனக்கு என்ன வெட்கமா இருக்கா? ஆங்கிலம் தெரியாதுனு சொல்றதுக்கு நாங்க வெட்கபடணும்னு அவசியம் கிடையது. எங்களுக்கு ஆங்கிலம் படிக்கணும்னு அவசியம் கிடையாது. இந்திய மொழியில அலுவல் மொழி ஹந்தி ஒண்ணு இருக்கு. அது கத்துட்டிருக்கோம்

தமிழ் தெரியும். தெலுங்கு காரனுட்ட தெலுங்கு பேசுவோம். மலையாளகாரனுட்ட மலையாளம் பேசுவோம்.

அதனால், இந்தியாவுல வாழ்றளவுக்கு எங்களுக்கு தெரியும். நீ தான் வெளியூர்ல வெள்ளக்காரனு கூடடன் சுத்துறவன். அதனால் உனக்கு தான் ஆங்கிலம் தெரியணும். அதனால வார்த்தைய பார்த்து யூஸ் பண்ணுங்க. ஜெய்ஹிந்த். இவ்வாறு அந்த வீடியோவில் சிஆர்பிஎப் வீரர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments