Saturday, May 4, 2024
Homeஇலங்கை செய்திகள்இடை நிறுத்தப்பட்ட படகுச் சேவை - அந்தரிக்கும் பயணிகள்!

இடை நிறுத்தப்பட்ட படகுச் சேவை – அந்தரிக்கும் பயணிகள்!

2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பயணிகள் படகுச் சேவை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஊர்காவற்றுறை- காரைநகர் – எழுவை தீவு –  அனலைதீவு – நயினாதீவு வரையான சேவை இடம்பெறுவதில்லை. இதனால் இப்பயணிகள் படகுச்சேவையை பயன்படுத்தும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளர் திரு. குரூஸ் அவர்களுடன் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் பிரஸ்தாபித்துள்ளர்.

இது சம்மந்தமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆவன செய்வதாக திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார்.

இச்சேவை எதிர்காலத்தில் காரைநகர் இறங்குதுறையிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும் தவிசாளரால் சுட்டிக்காட்டப்பட்டது. 1990 ஆம் ஆண்டிற்கு முன்பு காரைநகர் துறைமுகத்திலிருந்து மேற்படி சேவைகள் கிரமமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கும் காரைநகரிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கவேண்டுமென தவிசாளர் பணிப்பாளரிடம் வலியுறுத்தினார். தற்போது இப்பயணிகள் கப்பல் எழுவதீவு இறங்கு துறையில் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments