ரஜினிகாந்த்தின் ஜெயிலர் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துவருகின்றன. இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துவருகிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துவருகின்றனர்.
பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்துவருகிறார்கள். பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்தப் படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப் பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்படுவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
ந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில் மண் சாலையின் இருபுறம் ஜீப்புகள் கவிழ்ந்து கிடக்கின்றன. இதனால் இந்தப் படம் பரபரப்பான ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.