Sunday, May 5, 2024
Homeசினிமாஇந்த கால இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா கொடுத்த டிப்ஸ்...!!

இந்த கால இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா கொடுத்த டிப்ஸ்…!!

இசையமைப்பாளர் தேவையில்லாத ஒலிகளை நீக்க வேண்டும் என இளையராஜா தெரிவித்துள்ளார். 34-வது அகில இந்திய மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்கும் கலாச்சார கலைக்கூடல் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக அரங்கத்தில் நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை இசையமைப்பாளரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

விழாவில் பேசிய இளையராஜா, தேவையற்ற ஒலிகளை ஒதுக்குவது நல்லது. ஒரு சிற்பி தேவையில்லாத பகுதியை நீக்கினால் மட்டுமே அழகிய சிலையை வடிவமைக்க முடியும். அதே போல ஒரு இசையமைப்பாளர் தேவையில்லாத ஒலிகளை நீக்கிவிட்டு சரியான பாடலை வடிவமைத்தால் மக்கள் ரசிப்பார்கள், நல்ல பாடல் கிடைக்கும்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments