செம்பி திரைப்படத்தின் இடம்பெறும் இறுதி வாசகத்தால் செய்தியாளர்கள் காட்சியில் இயக்குனர் பிரபு சாலமனுக்கும் சில செய்தியாளர்களுக்கும் கருத்தியல் ரீதியாக வாக்குவாதம் ஏற்பட்டது.
கும்கி, மைனா முதலான படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை வெளியாகும் செம்பி திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை இணையதள செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.