சமீப காலமாகவே இளம் வயது நபர்கள் மாரடைப்பு போன்ற நோய்களின் காரணமாக திடீரென மரணமடையும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஜாலியாக சிரித்து ஆடிப்பாடி கொண்டிருக்கும்போதே திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அப்படி ஒரு அதிர்ச்சிக்குரிய மரணம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு விழாவில் அங்கு வந்திருந்த பலரும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மணமக்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். இதில் மணமக்களின் உறவுக்காரப் பெண்ணான 23 வயது ஜோஸ்னா லூயிஸ் என்பவரும் விழாவில் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்தார். நடனமாடிக்கொண்டிருக்கும்போது ஜோஸ்னா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்தும் அங்கிருந்தவர்கள் பதறிப்போய் இளம்பெண்ணை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.