Sunday, April 28, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையிலிருந்து இன்று அதிகாலை படகு வழியாக 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் !

இலங்கையிலிருந்து இன்று அதிகாலை படகு வழியாக 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் !

இலங்கையிலிருந்து இன்று அதிகாலை படகு வழியாக 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அண்டிய மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இலங்கை – இந்தியாவுக்கு இடையே உள்ள மணல் தீடைகளில் இந்தியாவின் ஆளுகையில் உள்ள மூன்றாவது தீடையில் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இதேநேரம் மேலும் ஒரு படகில் தமிழகம் நோக்கிப் பயணிக்க முற்பட்ட 6 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments