Friday, May 17, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவு.

இலங்கையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவு.

இலங்கையில் இன்றைய தினம் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியிலேயே இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று முற்பகல் 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

புத்தல பிரதேசத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் அண்மையில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments