Tuesday, April 30, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு!

இலங்கையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள மக்களை இலக்கு வைத்து பயன்படுத்த முடியாத பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தரமற்ற வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு இவ்வாறு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments