முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் சடலம் இன்று இரவு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (13-04-2023) மாலை 7.30 மணியளவில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த போது அங்கவீனமுற்ற நபர் வாந்தி எடுத்துள்ளதாகவும் சாரதி மற்றும் வர்த்தகர் ஒருவரும் அவரை இறக்கிவிட்டதாகவும் தெரியவருகின்றது.
பின்னர் 1990 என்ற ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
குறித்த நபர் மட்டக்களப்பு, களவாஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 51 வயதுடைய பெருமாள்சாமி சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.